MGNRGEA....

கிராமசபை ரத்து செய்தாலும் ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தின் கீழ் திட்டமிடல் கூட்டம் நடந்தே தீரனும்...

மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்பு சட்டத்தின் கீழ் செயலுக்கு வரும் திட்டங்கள் என்பது ஒரு நெடு நீண்ட திட்டம் இந்த திட்டத்தில் ஒதுக்கப்படும் நிதி,பணிகள் என்பது அனைத்தும் மக்களே தங்களின் கிராமங்களில் உள்ள நீர்நிலைகள் சரிசெய்தல் புதிய நீர்நிலை கட்டமைப்பு உருவாக்கிகொள்ள அதுமட்டுமின்றி தனி நபர் நிலங்களில் மண் அரிப்பை தடுத்து நிறுத்திடவும் நிலத்தடி நீரை தக்க வைத்துக்கொள்ளவும் பண்ணை நிலங்களில் குட்டைகள் அமைதிடல் மேலும் கிராமங்களில் உள்ள குழந்தைகள் பாதுகாப்பு மையமான அங்கன்வாடி பள்ளிகள் , போன்ற பள்ளிகளின் இன்றி கிராமத்தில் இயற்கை சூழல் ஏற்படுத்திட சாலை ஓரங்களில் மர செடிகள் நடவு செய்து அதனை தினம் தினம் பராமரிக்க வும் அதேபோல் ஆயுஷ் க்கு ஒத்துழைப்பாக மூலிகை மரங்கள் பராமரிப்பு என்று ஏராளமான திட்ட வசதியுடன் இருப்பது தான் 100 நாள் மகாத்மா காந்தி தேசிய ஊராக வேலை உறுத்தியளிப்பு சட்டம்(திட்டம்) 2005 ஆகும்.


அதன் கீழ் தற்போதைய 2020 -2021 நடபாண்டிற்கான (Labour Estimate ) தொழிலாளர் மதிப்பீட்டை மக்களே தயாரிக்க வேண்டி அக்டோபர் 2 ம் தேதி ஆரம்பித்து ஜனவரி 20 ம் தேதி வரை திட்டமிட மக்கள் கையிலே கொடுத்துள்ளது இச்சட்டம் அதுமட்டுமின்றி 100 நாள் வேலையில் ஒதுக்கப்படும் நிதியை மக்களே சமூக தணிக்கை செய்திட இச்சட்டம் அனுமதித்து உள்ளது என்பதை அனைவரும் அறிந்துகொள்ள வேண்டிய ஒன்று.....

மத்திய அரசின் சுற்றறிக்கை என்பதை கிளிக் செய்யவும்

Comments

Popular posts from this blog

புகார் அளித்த 3 நாளில் தீர்வு